அமெரிக்காவில் சூறாவளி: இருவர் பலி; பலர் காயம்

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தின் அருகிலுள்ள எல் ரெனோ குடியிருப்புப் பகுதியில் தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சுமார் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இப்பகுதி ஓக்லஹோமா மாகாணத்தில் இருந்து 29 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் புயல், சூறாவளி, வெள்ளம் போன்று 170 முறை இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை