பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள்

வடக்கில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புகளை தொடர்ந்து பாடசாலைகள் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டன.

இந் நிலையில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் கடந்த 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனடிப்படையிலே இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து பாடசாலை அதிபர் ஆசிரியர் பெற்றோர்களோடு பாடசாலை வளாகங்களில் சோதனைகளை நடத்தி மாணவர்கள், அவர்களது புத்தக பைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரந்தன், தலைமன்னார்,

வவுனியா விஷேட நிரூபர்கள்

 

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை