அவுஸ்திரேலியாவில் திடீர் புழுதிப் புயல்

அவுஸ்திரேலியாவின் மைல்டுரா பகுதியில் திடீரென புழுதி புயல் வீசியதால், வானம் கருமை படர்ந்து காட்சியளித்தது.

வடமேற்கு விக்டோரியா பகுதிகளில் மணிக்கு 87 கிலோ மீற்றர் வேகத்தில் புழுதி புயல் வீசியது. சுமார் ஒரு மணி நேரம் வரை வானம் கருமை படர்ந்து காட்சியளித்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்த புழுதி காற்றில் மைல்டுரா விமான நிலைய பகுதி இளம் சிவப்பு நிறத்துக்கு மாறியதை அடுத்து விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டு, சில மணி நேரம் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thu, 05/09/2019 - 02:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை