மாணவர்களிடையே உடல் பருமன் பிரச்சினை அதிகரிப்பு

இலங்கையிலுள்ள மாணவர்கள் பலர், உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தரம் 5 இல் 100 மாணவர்களில் 7 பேர் என்ற அடிப்படையிலும், தரம் 10 இல் 100 மாணவர்களில் 5 பேர் என்ற அடிப்படையிலும் மாணவர்கள்  உடல் பருமனினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உடல் பருமன் நோய்க்கு உள்ளாகும் மாணவர்கள் இருதய நோய், ஈரல் நோய், சுரப்பித் தொகுதி பிரச்சினை, என்புத் தொகுதி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

ஆகவே, உடல் பருமன் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட முடியாவிடின், எதிர்கால இலங்கை சமூகம், சுகாதார மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும், சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

Thu, 05/30/2019 - 11:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை