மதவாச்சி சோதனை சாவடியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

142.812 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை மதவாச்சி சோதனைச் சாவடியில்  பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று (22) கைதுசெய்துள்ளனர்.  

இது தொடர்பாக கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த சோதனைச் சாவடியில் வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவ்வாகனத்திலிருந்து 66 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தை சேர்ந்த 50 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். 

Thu, 05/23/2019 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை