கொட்டாஞ்சேனை, புளூமென்டல் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஓய்வுபெற்ற வைத்தியர் (67) ஒருவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
தமிழ் வைத்தியர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த வைத்தியர் இரு மாடிகளை கொண்ட வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. .
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், குறித்த சடலம் காணப்பட்டதாகவும் குறித்த வீட்டில் திருட வந்த ஒருவர் அல்லது பலரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
from tkn