போலி நாணயத் தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கொஹுவளை, சரணங்கர வீதியில் நேற்று (29) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து போலி நாணயத் தாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக கொஹுவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, கொஹுவளை, சரணங்கர வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் குறித்த பெண்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பை வசிப்பிடமாக கொண்ட 19, 20 வயதுகளையுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து
500 ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் 41 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சந்தேக நபர்களை நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (30) ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
Thu, 05/30/2019 - 11:41
from tkn