சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆனந்தகுமார் காலமானார்

மூத்த ஊடகவியலாளரும் சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையின் இணை ஆசிரியருமான எஸ். ஆனந்தகுமார் நேற்று காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 71. 1980களில் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் சேர்ந்த இவர், ஒரு தரமான செய்திப் பத்திரிகையை வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தார்.

இவர் இறுதி மூச்சுவரை லேக் ஹவுஸ் நிறுவனத்தில் முழுநேர ஊடகவியலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவரது புதல்வியான நர்மதா ஆனந்தகுமார் டெய்லி நியூஸ் ஆங்கில பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றுகிறார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை