மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபெல் நடால் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஸ்பெயின் நாட்டின் மெட்ரிட் நகரில் மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபெல் நடால், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் ஆரம்பம் தொட்டே ஆதிக்கம் செலுத்திய ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6–4, 2–6, 6–3 என்ற கணக்கில் ரபெல் நடாலை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் அவர், நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.
ஏ.டி.பி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறியவர் ரபெல் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.
Mon, 05/13/2019 - 06:00
from tkn