நாட்டின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்

கிழக்கு மற்றும் வடமத்தி மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் நாளைய தினம் (10) வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக களைப்பு, உடற்சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.

இக்காலப்பகுதியில் அதிகளவான தண்ணீரை அருந்துமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

Thu, 05/09/2019 - 15:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை