எதிர்வரும் வெசாக் போயா தினத்தில் தானசாலைகள் அமைக்க விரும்புவோர், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற வேண்டும் என, அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
'தற்போதைய சூழ்நிலையில் தானசாலைகள் மற்றும் வெசாக் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டாமென, மகாநாயக்க தேரர்கள் கோரியுள்ளனர். எனினும், தானசாலைகளை அமைக்க விரும்புவோர், அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில், தானசாலைகள் அமைக்கப்படும் இடத்தை பதிவு செய்வது தொடர்பில் விண்ணப்பிக்க வெண்டும்' என, அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தானசாலைகளை அமைப்பதை முடிந்தளவில் குறைத்துக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
from tkn