இரு புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் நேற்று பதவியேற்பு

புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் நேற்று (29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,

மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக பீ.ஹரிசனும் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக வசந்த சேனாநாயக்கவும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை