பிரதமர் மோடி இன்று பதவியேற்பு

தனிபெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி (68) இன்று (30) நாட்டின் பிரதமராக 2ஆவது முறையாக பதவியேற்கிறார். பதவியேற்பு வைபவம் இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி கையளித்தார். மக்களவைத் தேர்தலில் 353 தொகுதிகளை கைப்பற்றி, மத்திய ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பலத்துடன் நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார்.

நேற்று (29)மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 16ஆவது பாராளுமன்ற மக்களவைக்கான காலாவதி நாள் ஜூன் 3ஆம் திகதி என்பதால் அதற்கு முன்பாக புதிய அரசு அமைக்கப்பட வேண்டும்.

அதையடுத்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16ஆவது மக்களவையை கலைத்து 17ஆவது மக்களவையை ஏற்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, குடியரசு தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை கையளித்தார். தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

 

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை