மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை, திருக்கோவில் காஞ்சிரம்குடா சிறிவள்ளிபுரம் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில்  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (15) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (17)  மாலை குறித்த சிறுவன், ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த வேளையிலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியதாகவும் பொலிஸார்; தெரிவித்தனர்.

 (எம்.எஸ்.எம்.ஹனிபா -ஒலுவில் விசேட நிருபர்)

Sat, 05/18/2019 - 14:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை