வன்முறை சம்பவம் தொடர்பில் தயாசிறியிடம் வாக்குமூலம்

அண்மையில் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான  தயாசிறி ஜயசேகர வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு பிரிவுக்குரிய  பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று (18) முற்பகல் கொழும்பு பிரிவுக்குரிய  பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பி. முன்னிலையாகியுள்ளார். 

Sat, 05/18/2019 - 12:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை