எழுத்தாளர் தோப்பில் மீரான் காலமானார்

சாஹித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) தமிழ்நாடு, நெல்லையில் நேற்றுக்காலை காலமானார்.​

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் தான் இவரது பூர்வீகம். தமிழில் எழுதுவது மட்டுமில்லாமல் மலையாளத்தில் எழுதுவதிலும் இவர் கைதேர்ந்தவர். 1944ல் பிறந்த இவர் தனது பதின்ம வயதுகளில் இருந்தே புதினங்களை எழுதி வந்தார்.

தோப்பில் முகமது மீரான், சாய்வு நாற்காலி நாவலுக்காக 1997ல் சாஹித்திய  அகாடமி விருது பெற்றார்.

இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக எழுதாமல் இருந்தார். கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறி கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை மரணமானார்.

இவரது நல்லடக்கம் நேற்று மாலை நெல்லை பேட்டையில் நடைபெற்றது.

 

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை