எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 3 தொன் குப்பை சேகரிப்பு

எவரஸ்ட் சிகரத்திலிருந்து 3 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எவரஸ்ட் சிகரத்தைச் சுத்தம்செய்ய குழு ஒன்று அங்கு அனுப்பப்பட்டது. இரண்டு வாரங்களில் அந்தக் குழுவினர் 3 தொன்் குப்பைகளைச் சேகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையேறிகள் அங்கு சென்று மலையேறும்போது, அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. கைவிடப்படும் மலையேறும் சாதனங்கள், கூடாரங்கள், எரிவாயுக் கலன்கள் ஆகியவை அங்கு குப்பைகளாகக் குவிகின்றன. 14 பேர் கொண்ட துப்புரவுக் குழுவை நேப்பாள அரசாங்கம் எவரஸ்ட் சிகரத்திற்கு அனுப்பியுள்ளது. ஒன்றரை மாதத்திற்குள் 10,000 கிலோகிராம் குப்பையைச் சேகரிப்பது குழுவின் இலக்காக உள்ளது.

Fri, 05/03/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை