அமித் வீரசிங்கவுக்கு 28 வரை விளக்கமறியல்

மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு (12), திங்கள் (13) தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவங்கள் தொடர்பாக மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க, நேற்று(14) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த கலக சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால்விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினராலேயே அவர்  கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமார வரக்காபொலவில்  நேற்று (14) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Wed, 05/15/2019 - 15:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை