வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு; அறுவர் படுகாயம்

SUG

கெக்கிராவை, மடாத்துகம பகுதியில் இன்று (15) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Wed, 05/15/2019 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை