தனியார் விமானம் விழுந்து மெக்சிகோவில் 14 பேர் பலி

மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர். அதில் பயணம் செய்தவர்கள், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் குத்துச் சண்டை போட்டி ஒன்றைப் பார்க்கச் சென்றனர். அங்கிருந்து திரும்பியபோது விமானம் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அந்த விமானம், கோகுய்லா வான்பகுதியில் பறந்தபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தின் இறக்கைகள், வால் பகுதி மற்றும் பிற பாகங்கள் தரையில் சிதறி கிடப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்நாட்டு தொலைக்காட்சியில் வெளியாகின.

விமானத்தில் இருந்தவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. உயிரிழந்தவர்கள் 19 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என மெக்சிகோ ஊடகம் ஒன்று தகவல் அளித்துள்ளது.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை