ஜனாதிபதியின் உருவத்தை சிற்பமாக செதுக்கிய கலைஞர்

கல்முனையைச் சேர்ந்த பிரபல சிற்பக்கலைஞர் கதிரமலை நவமணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவத்தை மரத்தினால் செதுக்கியுள்ளார்.

'போதைப்பொருளற்ற தெய்வீக நாட்டைக்கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்படத்தினை இவர் இலங்கை வரைபடத்திற்குள் கச்சிதமாக செதுக்கியுள்ளார்.

வேப்ப மரத்தினால் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தினை வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின் போது கலைஞர் கதிரமலை நவமணி ஜனாதிபதியிடம் வழங்கவுள்ளார். ஜனாதிபதியினை இலங்கைத் தேசத்திற்குள் மரத்தினால் செதுக்கிய முதல் சிற்பக்கலைஞராக நவமணி திகழ்கிறார். இதனை செதுக்குவதற்கு பதினைந்து நாட்கள் எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

 

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை