சீனாவில் புழுதிப் புயலில் இரண்டு குழந்தைகள் பலி

மத்திய சீனாவில் ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி 2 குழந்தைகள் பலியாகின. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட புழுதிப் புயல் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றை தாக்கியுள்ளது. இந்த புழுதிப் புயலில் சிக்கி 2 குழந்தைகள் பலியான.

மேலும் 18 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு குழந்தையின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேய் காற்று போல் வீசிய சுழற்காற்றில் அங்கிருந்த விளையாட்டு மெத்தைகள் தூக்கி வீசப்படும் காட்சிகளும், குழந்தைகளும் பெரியவர்களும் உயிரை காத்துக் கொள்ள சிதறி ஓடும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை