ஏப்ரல் 28க்கு முன் அல்ஜீரிய ஜனாதிபதி பதவி விலகுகிறார்

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசிஸ் பெளட்பிலிக்கா தனது தவணைக்காலம் முடிவடையும் ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலகுவார் என்று அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தான் பதவி விலகும் முன் அரச நிறுவனங்களின் தொடர்ச்சியான இயக்கத்தை உறுதி செய்வார் என்று ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 82 வயதான பெளட்பிலிக்கா கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவில் ஆட்சியில் உள்ளார். அவரை பதவி விலகக் கோரி கடந்த பல வாரங்களாக பாரிய ஆர்ப்்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அவர் ஐந்தாவது தவணைக்கு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதை கைவிட்டார்.

தேர்தல் பிற்போடப்பட்டிருப்பதோடு சீர்திருத்தங்கள் தொடர்பில் தேசிய மாநாடு ஒன்று நடத்தப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை