நம்பகமான செய்திகளை வழங்க பேஸ்புக் முடிவு

பேஸ்புக் செயலியில், தரமான மற்றும் நம்பகமான செய்திகளை பயனர்களுக்கு வழங்கும் விதமாக புதிய வசதி ஒன்றை அமைக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் சமூகம் குறித்து நடைபெற்ற வீடியோ உரையாடலில் இதனை அவர் தெரிவித்தார். பேஸ்புக் நிறுவனம் சார்பாக இதற்கென தனி ஊடகவியலாளர்களை நியமிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அவர், தொழில்முறையில் இயங்கிவரும் நம்பகமான ஊடகங்களிடம் செய்திகளைப் பெற்றே பிரத்தியேகமான முறையில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற தரம் மிக்க செய்திச் சேவை வசதியானது நிறுவப்படவேண்டும் என 10 முதல் 15 வீத பேஸ்புக் பயனர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகமாக உலாவரும் நிலையில், பேஸ்புக்கின் இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை