காரைதீவில் துக்க தினம் அனுஷ்டிப்பு

உயிர்த்தஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்களில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவில் நேற்றும் (23)கடைகளடைக்கப்பட்டு பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.வீதியெங்கும் கறுப்பு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டிருந்ததுடன் ஆங்காங்கே பதாதைகளும் தொங்கவிடப் பட்டிருந்தன.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஒலிபெருக்கிவாயிலாக விடுத்த வேண்டுகோளை ஏற்று காரைதீவில் சகல கடைகளும் மூடப்பட்டதுடன் வெள்ளைக்கொடிகளும் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டன.மேலும் பாரிய அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றன.

காரைதீவு தபாலகம், பிரதேச சபை, சுகாதார அலுவலகம், கலாசாரமண்டபம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.

காரைதீவு குறூப் நிருபர்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை