மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ஒரு வார விடுமுறையில் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணித் தலைவரான மாலிங்க மும்பை பிரிமியர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராவார். இலங்கையில் நடைபெறும் உள்ளுர் தொடரில் பங்கேற்பதற்காக, முதல் போட்டியில் களமிறங்கவில்லை.
மும்பை அணி பந்துவீச்சு சற்று பலவீனமாக இருக்க உடனடியாக இலங்கை கிரிக்கெட் சபையிடம் அனுமதி வாங்கி, 3 போட்டியில் மட்டும் பங்கேற்கிறார். பெங்களுருவுக்கு எதிராக இவர் வீசிய ‘நோ போல்’ சர்ச்சையை கிளப்பியது.
வரும் ஏப். 3 இல் சென்னை அணிக்கு எதிராக பங்கேற்ற பின், உடனடியாக இலங்கை செல்கிறார். மறுநாள் (ஏப். 4இல்) ஆரம்பமாகும்் ஒரு வார தொடரில் பங்கேற்று, பின்னர் மீண்டும் மும்பை அணிக்கு திரும்புவார் எனத் தெரிகிறது.
Mon, 04/01/2019 - 06:00
from tkn