கலேவெல, தேவஹுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
52 மற்றும் 53 வயதுடைய தம்பதியினரது சடலங்களே நேற்றிரவு (15) மீட்கப்பட்டுள்ளன.
காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற சண்டையில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tue, 04/16/2019 - 08:46
from tkn