ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உட்பட போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த மூவர் கொள்ளுப்பிட்டியில் இன்று (17) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து அப்போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும், இவர்கள் புத்தளத்தைச் சேர்ந்த 33 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல் ஹமீத் பஸ்லின் (33), அப்துல் கரீம் முஹம்மட் ஹஸ்னி (38), முஹம்மட் இக்பால் கிருஷ்ணய் ஆயிஸ் (38) எனும் சட்டத்தரணி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முஹம்மட் இக்பால் கிருஷ்ணய் ஆயிஸ் (38) என்பவரான சட்டத்தரணியிடமிருந்து 4.11 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் ஏனைய இரு சந்தேக நபர்களிடமிருந்து 4.3 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 4 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றைய தினம் (17) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்ப்பிட்டி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
from tkn