மாகந்துரே மதூஷின் மைத்துனர் கைது

துபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல ​போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட அவரின் மைத்துனர் நிலான் ரொமேஷ் உட்பட அறுவர், நாடு கடத்தப்பட்ட நிலையில்கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விசாரணக்காக கொழும்பு குற்றப்பிரிவினர் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், UL 226 எனும் விமானத்திலேயே நாடு கடத்தப்பட்டனர். அந்த விமானம், இன்று காலை 5:55க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதேவேளை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷின் மைத்துனர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஏனையவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thu, 04/18/2019 - 11:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை