உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு அணி வெற்றி

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஏறாவூர் இளந்தாரகை அணி வீரர்களை பிரதானமாக கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அணியினர்- அம்பாறை மாவட்ட அணியினரை 06 இற்கு 00 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து -சம்பியன் பட்டத்தை சுவீகரித்து கொண்டனர்.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க, மாவட்ட அரச அதிபர், இராணுவ கட்டளை தளபதிகள், சர்வ மதப்பெரியார்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .

மட்டக்களப்பு சுழற்சி , புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை