திருகோணமலையில் 'அனைவருக்கும் கூடைப்பந்தாட்டம்' பயிற்சி முகாம்

திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் மார்ச் 24ம் திகதி'அனைவருக்கும் கூடைப்பந்தாட்டம்'எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சிமுகாம் ஒன்று நடாத்தப்பட்டது.முன்னாள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விஜயநீதன் தலைமையில் பழைய மாணவர்கள் இணைந்து இப்பயிற்சியை வழங்கினர்.

பாடசாலையின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடாத்தப்பட்ட இந்த பயிற்சிமுகாமின் நோக்கம் எதிர்காலத்தில் சிறந்த கூடைப்பந்தாட்ட தேசிய வீரர்களை உருவாக்குவதேயாகும். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு இவ்விளையாட்டு தொடர்பான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பழைய மாணவர் சங்கம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை அதிபரின் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பயிற்சிமுகாமில் பாடசாலையின் பழைய மாணவரும் தற்போதைய விபுலாநந்தா கல்லூரியின் அதிபருமான ஜெரோம் கலந்து கொண்டமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

திருகோணமலை சென் ஜோசப் கல்லூரி தேசிய மட்டத்தில் விளையாட்டுத் துறையில் பலவெற்றிகளை ஈட்டிவருகின்ற ஒருபிரதான பாடசாலையாக கிழக்கு மாகாணத்தில் திகழ்ந்து வருகின்றது.

திருகோணமலை விளையாட்டு நிருபர்

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை