சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைது

மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கற்பிட்டியில் 10மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.  

கற்பிட்டி, உச்சிமுனை மற்றும் கரைத்தீவு கடற்பரப்பில் நேற்று (10) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இம்மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த 20, 51வயதுடைய மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்களிடமிருந்து 2இயந்திரப் படகுகள், மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

(ரஸீன் ரஸ்மின் -கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்)

Thu, 04/11/2019 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை