தேசிய விவசாயக் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டம்

எதிர்காலத்தில் நாட்டுக்குச் சாதகமான தேசிய விவசாயக் கொள்கையை  அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

அரசாங்கங்கள் மாற்றமடைந்தபோதிலும்,  தேசிய விவசாயக் கொள்கைத் திட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

தேசிய விவசாயக் கொள்கைத் திட்டத்தின் மூலம்  உள்ளூர் விவசாய நடவடிக்கைகளை பலப்படுத்த முடியும்என்பதோடு, உள்ளூர் விவசாயிகளையும் மிகவும்  பாதுகாக்க முடியும்  எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் அறுவடைக்காலங்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Wed, 03/27/2019 - 11:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை