தெஹிவளை இலங்கை வங்கிக்கிளையில் தீ

தெஹிவளை காலி வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையில் இன்று (28) அதிகாலை பரவிய தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த வங்கிக் கிளையில் திடீரெனத் தீ பரவிய நிலையில், தெஹிவளைப் பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சேத விபரங்கள் தொடர்பாகவும் இதுவரையில் தெரியவரவில்லை. எனினும், தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்று மதிப்பீடு செய்யப்படும் எனவும், பொலிஸார் தெரிவித்தனர். 

இத்தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதோடு, அது தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாகவும், பொலிஸார் கூறினர். 

Thu, 03/28/2019 - 11:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை