மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக, மேலதிக அரசாங்க தலைமை சட்ட வழக்குரைஞரான, ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்னவும் இந்நிகழ்வில் பங்கு பற்றியிருந்தார்.
Thu, 03/28/2019 - 12:41
from tkn