உதைபந்தாட்ட துறையின் சாதனை வீரர்கள் பாராட்டி கௌரவிப்பு

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த சாதனை வீரர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு (16) இரவு மருதமுனை ஸம்ஸ் மத்தியகல்லூரி வளாகத்தில் கழகத்தின் தலைவர் ஏ.எம். ஸிலியத் நஜிமுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் உதைபந்தாட்ட துறையின் வளர்ச்சிக்கு அர்பணிப்புடன் சேவையாற்றிய வீரர்கள் மற்றும் நிருவாகத்தினர் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்கஅமைச்சரை கழகத்தினர் பொன்னாடைபோத்தி விருது வழங்கி கௌரவித்தனர்.

இதில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், கல்விஅதிகாரிகள், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் கழகத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை