சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இன்று விசேட கௌரவ விருது

மல்வத்து மகா விகாரையில் வைபவம்

மல்வத்து மகாபீட மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்கநாயக்கர்களினால் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு விசேட கௌரவ விருதொன்று வழங்கப்படவுள்ளது. மல்வத்த மகா விகாரையில் இன்று 19 ஆம் திகதி இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை ராமான்ய நிக்காய “விஷ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன” என்ற விருதை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியிருந்தது. அதேவேளை ஜப்பான் அரசாங்கம் ஜப்பானின் உயர் விருதான “உதயசூரியன்” விருதை கடந்த வருடம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியிருந்தது.

2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் “விஷ்வ சாம” விருதை கரு ஜயசூரியவுக்கு வழங்கியிருந்தது. அத்துடன் இந்தியாவின் அப்துல் கலாம் விஞ்ஞான நிறுவனம் “ஆசியாவின் பெருமை” என்ற விருதையும் சபாநாயகருக்கு அண்மையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை