கேகாலை ‘பிக்மெச்’ ஒரு நாள் போட்டி நாளை

கேகாலை சென்ட் மேரிஸ் கல்லூரிக்கும் கேகாலை வித்தியாலயத்துக்குமிடையிலான ‘பிக்மெச்’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

கேகாலை விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் பின்னர் நாளை ஞாயிற்றுக்கழமை மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

1963 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டிகள் பின்னர் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியாக நடத்தப்பட்டது. தற்போது இரு பாடசாலைகளுக்கிடையேயான ‘பிக்மெச்’ கிரிக்கெட் போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றன. நாளை மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டியுடன் நிறைவு பெறுகிறது.

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை