பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அஞ்சல் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு

பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அஞ்சல் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள எனது அமைச்சின் மூலம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். இந்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்திக​கொள்ள வேண்டும் என்றார்.

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சின் ஏற்பாட்டில் அஞ்சல் திணைக்களத்தில் சிற்றூழியர்களுக்கான   பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது  கோரப்பட்டுள்ளன. இதில் மலையக இளைஞர், யுவதிகளையும் இணைத்துக்கொள்வது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சுடன் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு  அவர் தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து  தெரிவித்த அவர், 

2019 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் திணைக்களத்தின் சிற்றூழியர் சேவையின் தேவைக்காக தினசரி சம்பள அடிப்படையில் கடமைகளை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2019.04.01 முதல் பிரதேச அத்தியட்சகர் பிரிவு மட்டத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஊவா மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் உட்பட மலையகத்தின் அனைத்து இளைஞர், யுவதிகளும் விண்ணப்பிக்க முடியும். இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார். 

Sat, 03/23/2019 - 12:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை