சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம்; அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இடியுடன் மழை பெய்யும் வேளையில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
from tkn