உலமாக்கள் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

கொழும்பு, தெஹிவளை இத்திகாத் உலமா விளையாட்டுக்கழத்தின் 10 வது ஆண்டை முன்னிட்டு உலமாக்கள் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட “லீடர் ரிஷாத் பதியுதீன்” வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தெஹிவளை இத்திகாத் உலமா அணியினர் சம்பியனாகியுள்ளனர்.

இந்த போட்டி தொடர் அண்மையில்(02) எஸ்டிஎஸ் ஜயசிங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு அமைப்பின் தலைவர் ரியாஸ் கலந்து கொண்டார்.

கெளரவ அதிதிகளாக மேமன் சங்கத்தலைவர் அனஸ், தெஹிவளை பள்ளிவாசல் சம்மேள தலைவர் உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடரின் இரண்டாம் இடத்தை கொழும்பு உலமா அணியும், மூன்றாம் இடத்தை பாணந்துறை உலமா அணியினரும், நான்காவது இடத்தை அக்குறணை உலமா அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

புத்தளம் தினகரன் நிருபர்

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை