மெத்சிறி செவன சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, ஆராய்ச்சி நிலையம் திறப்பு

சிறுநீரக நோய்த்தடுப்பிற்கு கடந்த 04வருடங்களாக முக்கியத்துவமளித்து மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களினால் நாடு முழுவதிமுலுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

எவர் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் கடந்த 04வருட காலத்தில் நாட்டினுள் மக்களுக்கான சேவைகள் வலுவடைந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அப்பாவி மக்களுக்காக அந்த சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக நிதியத்தின் 437மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (20) திறந்துவைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் எந்தவித நிதியையும் செலவிடாமல் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியத்தின் பூரண நிதி ஒதுக்கீட்டினால் இந்த சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது நிலையமாகும்.

“மெத்சிறி செவன” நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியை ஜனாதிபதி பதிவு செய்தார்.

மிகிந்தலை பொது நிர்வாக அமைச்சிற்கு சொந்தமான விடுதியில் தாபிக்கப்பட்டுள்ள 601ஆவது நீர் சுத்திகரிப்பு தொகுதியை தொலைத்தொடர் தொழில்நுட்பத்தினூடாக ஜனாதிபதி திறந்து வைத்தார்.

குறைந்த வருமானம் பெறும் 2,000குடும்பங்களுக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக ஐந்து பேருக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்குதல், 200சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தத்தில் சக்கரை அளவை பரிசோதிக்கும் கருவிகளை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாகவும் வட மத்திய மாகாணத்தின் சிறுநீரக நோயாளர் உள்ளிட்ட ஏனைய நோயாளிகளின் பாவனைக்கு இரத்த அழுத்தத்தை கணக்கிடும் 200கருவிகளை வட மத்திய மாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றன.

சிறுநீரக நோய்த்தடுப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற ஐந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் அநுராதபுர “மெத்சிறி செவன” நிர்மாணப் பணிகளுக்காக அர்ப்பணிப்பை வழங்கிய அதிகாரிகளைப் பாராட்டி நினைவுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் தனது பிரசார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியம் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவிகளின் மூலம் பலமான நிதியமாக மாறியுள்ளது. குறித்த நிதியத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி சிறுநீரக நோயாளிகளின் நலன்பேணல்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்குரிய ஆராய்ச்சிகளுக்கான பங்களிப்புகளை வழங்குதல், சிறுநீரக நோய் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

 நேற்று முற்பகல் இசுறுமுனிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

Thu, 03/21/2019 - 08:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை