கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்ரப் கழகம் சம்பியன்

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 2019ஆம் ஆண்டுக்கான பிரதேசமட்ட விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இவ் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் அணியை 2-1 என்ற சுற்று அடிப்படையில் அஷ்ரப் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.சுப்பர் சொனிக் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப்பிரிவில் 17 விளையாட்டுக் கழக அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அஷ்ரப் விளையாட்டுக் கழக அணி மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தலைமையில் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த (04) இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை