க.பொ.த. பரீட்சார்த்திகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

31இற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு   
 
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மூன்று இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   
 
இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரும் விசேட சுற்று நிரூபம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.   
 
இதனடிப்படையில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இம்முறை அடையாள அட்டைகள் வழங்கப்படும் என திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் மேலும் தெரிவித்தார். (ஸ)   
Tue, 03/19/2019 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை