அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 27மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

நேர்முகப் பரீட்சை சிறைச்சாலை திணைக்களத்தில் நடைபெறுமென சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அமெரிக்கப் பிரஜை உள்ளிட்ட 102 பேர் அலுகோசு பதவிக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். அவற்றை ஆராய்ந்து நேர்முகப் பரீட்சைக்கு 79 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் அலுகோசு பதவிக்காக இரண்டு நபர்களே தெரிவு செய்யப்படுவார்கள்.   

Tue, 03/19/2019 - 09:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை