உயர்தரம்வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனம்

அமைச்சரவை அங்கீகாரம்

உயர்தரம்வரை கற்ற 7,500பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.  

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கும் குறித்த அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்துவது மற்றும் இணைப்பு நடவடிக்கைகளுக்குமாக உயர்தரம் வரை கற்ற 7,500பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.  

க.பொ.த உயர் தரம் கற்று தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் சமூகத்தை இணைத்துக்கொள்வதன் மூலம் அவர்களை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.    இதற்கமைய தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி தொழிற் பயிற்சி திறனபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கே 7500பயிற்சித் திட்ட உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருட கால பயிற்சித் திட்ட உதவியாளர் பதவிக்காக ரூபா 15,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.(ஸ)  

Thu, 03/21/2019 - 09:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை