தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசிடமிருந்து ஒரு ரூ. 50

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசிடமிருந்து ஒரு ரூ. 50-Rs 50 Alloawance for Plantation Workers

அமைச்சர் நவீனின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்துடன் மேலும் ரூபா 50 இனை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூபா 750 ஆக அதிகரிப்பதற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையில் இணக்கம் ஏற்பட்ட போதும், குறித்த சம்பள அதிகரிப்பு போதியதாக இல்லை என, பெருந்தோட்ட துறையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

அது தொடர்பில் கருத்தில் கொண்டு, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தற்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக சம்பளமான, ரூபா 750 இற்கு மேலதிகமாக ரூபா 50 எனும் கொடுப்பனவையும் வழங்குவதற்கு அவசியமான நிதியத்தை ஏற்படுத்துவதற்கு அமைய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 03/27/2019 - 14:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை