37 சொகுசு பஸ்களை குத்தகைக்கு எடுக்கத் தீர்மானம்

பொதுமக்களின் நன்மை கருதி 37 சொகுசு பஸ் வண்டிகளை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்கு, அமைச்சரவை  அனுமதியளித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு அனுமதியளித்துள்ளது. நேற்று  இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கிலும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பொதுவழங்கல் குழுவின் பரிந்துரைக்கமைய தனியார் நிறுவனமான  சொப்ட் லொஜிக் ஒட்டோ மொபைல் நிறுவனத்துக்கு இது வழங்கப்படவுள்ளது.

Wed, 03/27/2019 - 14:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை