குத்துச்சண்டை போட்டியில் 15 பதக்கங்களை வென்ற வவுனியா வீரர்கள்

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தனதாக்கிக்கொண்டுள்ளனர்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற 15 பேர்பாடசாலை மட்டத்தில்தேசிய ரீதியாககண்டி மாநகரசபை மண்டபத்தில் இம்மாதம் 08, 09, 10 ஆம் திகதிகளில் நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் கலந்துகொண்டு 09 தங்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்கங்களையும்வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வவுனியா பாடசாலை மாணவர்களான 09 வீரர்களும் 06 வீராங்கனைகளும் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த எட்டு பாடசாலை வீரர் வீராங்கனைகள் 'கண் போய்ஸ்' விளையாட்டு கழகத்தினூடாக வூசூ குத்துச்சண்டையில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

(கோவில்குளம் குறூப் நிருபர் - காந்தன் குணா)

Wed, 03/13/2019 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை