ரூ.1000 கோரும் சைக்கிள் பயணம் கிளிநொச்சி வந்தடைவு

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கவும், தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனி வீடுகள் அமைத்து வழங்கக் கோரியும் மேற்கொள்ளப்பட்ட துவிச்சக்கர வண்டி பயணம் நேற்று (04) கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தர்மலிங்கம் பிரதாபன்(40) என்பவரின் பயணம் 23 ஆவது நாளான நேற்று (04) 23 மாவட்டங்களைக் கடந்து கிளிநொச்சியை வந்தடைந்தது. இவரது பயணம் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து மன்னார் ஊடாக வவுனியாவில் நிறைவடையவுள்ளது. இவரது திட்டமிட்ட பயணம் 2125 கிலோ மீற்றராகும் .

கிளிநொச்சி குறூப் நிருபர்

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை